மழைக்காதலன் கவிதைகள்…

என்னவள் காதலுக்கு கவிதாஞ்சலி ...

காதல் விழிகள்…

நிலவில் இரு கயல் மோத கண்டேன்..
உன் விழிகளாய்…


பகலவன் கண்ட பனித்துளிபோல்
தகிக்கிறது உன் விழி கண்ட என் இதயம்…


இருளின் சிறையில் நிலவுபோல்
நிலவின் சிறையில் இருள் உன் விழிகள்…


தொலைதூர நிலவும் கவர்ந்து செல்லும் என்பதனாலே
உன்னை சிறைவைத்தேன்
(என்)விழிகளாய் இமைகளுக்குள்…


அதிகாலை மழைச்சாரலின் குளிரிலும் தகிக்கிறதென் இதயம்… உன் கயல்விழி பார்வையினால்…



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *